Facebook Twitter RSS

Latest News

Tuesday, October 08, 2013

டாலரை காக்கும் செளதி அரேபியா!!!

அமெரிக்க மிரட்டலை நிராகரித்து ஈரானிடம் இருந்து இன்னும் அதிகமாக கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு ரூ. 57,000 கோடி மிச்சமாகும் என்று நேற்று கூறியிருந்தேன்.ஆனால்அதைச் செய்வது சாத்தியமா?கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது உலகளவில் டாலரில் மட்டுமே நடக்கும் ஒரு வியாபாரம். கச்சா எண்ணெய்யை வளைகுடா நாடுகளே மிக அதிக அளவில் உற்பத்தி செய்தாலும் கூட அதன் விலையை நிர்ணயிப்பது லண்டன் பங்குச் சந்தை தான். இங்கு தான் சர்வதேச அளவிலான காரணிகளை வைத்து கச்சா எண்ணெய்க்கான விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலகில் பல்வேறு நாடுகள் தங்களுக்கு இடையிலான ஏற்றுமதிஇறக்குமதிக்கு டாலரையே பொது கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
இப்போது ஒரு பிளாஷ்பேக்...

Wednesday, October 02, 2013

கிலாபத்தின் வீழ்ச்சியே மனிதகுலத்தின் சாபக்கேடு!

முஸ்லிம் உலகின் பாதுகாப்பு அரணாக விளங்கிய கிலாபா (இஸ்லாமிய அரசு) 1924ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் திகதியில் (28 ரஜப் மாதம் ஹிஜ்ரி 1342) முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் துருக்கிய தலைநகரான ஸ்தான்புலில் நிர்மூலமாக்கப்படடு 2008ம் ஆண்டுடன் 84 வருடங்கள் கடந்துவிட்டன. கிலாபத்தை அழித்ததன் மூலம் காலனித்துவ பிரித்தானியாவும், முஸ்லிம் உலகிலே அவர்களின் கைம்பாவையாக தொழிற்பட்ட ஆட்சியாளர்களும் முஸ்லிம் உம்மத்திற்கு பாரியதொரு அதிர்ச்சியினையும், கேவலத்தினையும் ஏற்படுத்தினார்கள். இருபதாம் நு}ற்றாண்டு முழுவதும் முழு உலகும், முஸ்லிம் உம்மத்தும் ஒட்டுமொத்த அழிவை நோக்கி பயணிக்க வேண்டி ஏற்பட்டது. முஸ்லிம் உம்மா பொருளாதார பலமற்ற, சர்வதேச பொருளாதார நிதியத்தினதும் (IMF), உலக வங்கியினதும் கால்களில் மண்டியிடும் சிற்சிறு தேசிய அரசுகளாக கூறுபோட்டு பிரிக்கப்பட்டது. முஸ்லிம் உம்மத் இராணுவ அரசுகளையும், சர்வாதிகார ஆட்சியாளர்களையும், ஜனநாயக கொடுங்கோலர்களையும், மிகவும் பின்தங்கிய அரசியல், பொருளாதார, தொழிற்நுட்ப கட்டமைப்பையும் கொண்ட சேதமுற்ற தேசமாக மாறிவிட்டது.

Monday, September 30, 2013

நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகள்


    உலகில் மனிதர்கள் நேர்வழியிலிருந்து பிறழும் போது அவர்களை தூய்மைப்படுத்துவதற்காக அல்லாஹ் தூதர்களை அனுப்புகிறான். அவர்கள் தூதர் தாம் என்பதற்கு அத்தாட்சியாக சில அதிசயங்களை முன்னறிவிப்பு செய்யக் கூடிய ஆற்றல்களையும் வருங்காலத்தில் நடைபெறவிருக்கின்ற சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்ய கூடிய திறனையும் அல்லாஹ் கொடுத்திருக்கிறான். அவ்வாறு இறுதி நபியாக வந்த நமது நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு சில விஷயங்களை முன்னறிவிப்பு செய்திருக்கின்றார்கள். அவற்றில் சில அவர்களின் வாழ்க்கையிலும் சில இனி வரக்கூடிய காலங்களிலும் நடைபெறவிருக்கின்றன இன்ஷா அல்லாஹ்.

Tuesday, September 24, 2013

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் பகுதி 3

புரட்சி - திருக்குர்ஆனின் வழியில்


மக்காவில் அருளப்பட்ட இறைவசனங்களின் மூலம் இறைவன் உலகுக்கு தந்த ஒளி மக்காவில் அருளப்பட்ட திருமறையின் இறைமொழிகள் ஒரு கேள்விக்கு தெளிவாகவும் தீர்க்கமாகவும் விடை தந்து கொண்டே இருந்தன. 13 ஆண்டுகளாக இந்த விடை கொண்டு அந்த மக்கள் அல்லாஹ்வின் வழிநோக்கி அழைக்கப்பட்டார்கள். இந்த 13 ஆண்டுகளிலும் இந்தக் கேள்விக்கு விடைதந்த இறைவசனங்களின் அடிப்படைத் தன்மைகள் மாறவில்லை. ஆனால் இந்தக் கேள்விக்கு விடைதந்த பாங்கும் பாணியும் மாறிக்கொண்டே இருந்தன. ஒவ்வொரு முறையும் திருக்குர்ஆன் இந்தக் கேள்விக்குப் பதில் தந்த பாங்கில், அந்தக் கேள்வி அன்று தான் புதிதாக எழுப்பப்பட்டது போலும், அன்று தான் அதற்கான பதில் அருளப்பட்டது போலும் இருந்தது. மக்கமா நகர் காலம் முழுவதும் இந்த அடிப்படைக் கேள்விக்கு தெளிவு தருவதில், அதைக் கொண்டு அந்த மக்களை இந்தப் பேரியக்கத்தில் பிணைத்திடுவதில் திருக்குர்ஆன் தன் முழுக் கவனத்தையும் செலுத்திற்று. புதமையும் புரட்சியும் நிறைந்த இந்த மார்க்கத்திற்கு இந்தக் கேள்விக்கான பதில்தான் அடித்தளம். இந்தக் கேள்வி அதன்பதில் இரண்டு முக்கியமான அடிப்படைகளைக் கொண்டது.

Dheenai Nilai Naatungal Athil Pirinthu Vidaatheergal

Saturday, August 24, 2013

மிக மோசமாக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு

எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தனது வரலாற்றில் மோசமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர். இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால அரசு கடந்த மூன்று தசாப்தங்களில் ஆட்சியில் இருந்த நிர்வாகம் எடுக்காத நடவடிக்கையாக அந்த அமைப்பின் உயர்மட்டத் தலைவர் மொஹமட் பதீயை கைது செய்து சிறைவைத்துள்ளது.

சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் சொல்லும் செய்திகள்


         
 சிரியாவின் இரசாயன ஆயுதப் பிரயோகம் பசர் அல் அசாத்தின் உண்மை நிலையை  மீண்டுமொருமுறை தோலுரித்துக் காட்டியுள்ளது . அத்தோடு மேற்கின் பக்குவமான முதலைக் கண்ணீரும் அதன் மீடியாக்களால் இதன் விடயத்தில் வடிக்கப் பட்ட நிலையில் இந்த சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இராணுவ அரசியல் பற்றிய பார்வைகள் இதன் மூலம் மறைந்து போகின்றது .

“மெட்ராஸ் கபே” படத்தில் விடுதலைப் புலிகளை எப்படி காட்டுகிறார்கள் தெரியுமா?

Source:viruviruppu.com
ற்போது சர்ச்சைகளில் பலமாக அடிபடும் மெட்ராஸ் கபே படம் திட்டமிட்டபடி நாளை வெளியாகுமா என்ற ஆவலை பலருக்கு ஏற்படுத்தியுள்ளன, அந்தப் படம் பற்றி வெளியாகும் செய்திகள். இந்தப் படம் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும. அதன் தலைவர் தலைவர் பிரபாகரனையும் பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்று கூறி படத்தை தடை செய்ய கோரியுள்ளன சில அமைப்புகள்.
Blogger Wordpress Gadgets